- கடந்த 24 மணித்தியாலத்தில் பொத்துவிலில் கூடிய மழை வீழ்ச்சி
- அடுத்த தேர்தலை முன்வைத்து சேவை செய்யவில்லை - அமைச்சர் உதுமாலெப்பை
- 35 மில்லியன் நிதியில் பொத்துவில் செம்மணிக்குளம் அபிவிருத்தி
- இன்று சந்திரகிரகணம்; இலங்கையில் முழுமையாக காண வாய்ப்பு
- பொத்துவில் பிரதேச நன்னீர் மீனவருக்கு வலைகள் அன்பளிப்பு
- கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது
- MARRIED COUPLE DROWNS IN POTTUVIL
- நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்...
- சதகதுஸ் சபாஹ் இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு.
- மர்ஹூம் மௌஜுன் அவர்களுக்கு துஆ பிரார்த்தனையும் கத்தமுல் குர்ஆன் நிகழ்வும்.
- வழு
-
- DB function failed with error number 1062
Duplicate entry '1337517322' for key 'time' SQL=INSERT INTO jos_vvcounter_logs (time, visits, guests, members, bots) VALUES ( 1337517322, 6, 4, 0, 2 )
- DB function failed with error number 1062
Administrator ஆல் எழுதப்பட்டது புதன்கிழமை, 15 பெப்ரவரி 2012 13:14
இன்று காலை 8 மணியுடன் முடிவுற்ற 24 மணித்தியாலத்தில் பொத்துவிலில் கூடிய மழை வீழ்ச்சி.
இன்று காலை 8 மணியுடன் முடிவுற்ற 24 மணித்தியாலத்தில் பொத்துவிலில் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக பொத்துவில் வானிலை அவதான நிலைய அதிகாரியான எம்.ஐ.ஏ. நயீம் தெரிவித்தார்.
இதன்படி பொத்துவிலில் 168.7 மி.மீ. மழை வீழ்ச்சியும், அக்கரைப்பற்றில் 85 மி.மீ. மழை வீழ்ச்சியும், மட்டக்களப்பில் 90 மி.மீ. மழை வீழ்ச்சியும் பதிவாகியதாக தெரிவித்த அவர், இன்று மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்யக்கூடிய காலநிலையே காணப்படுவதாகவும், இடையிடையே இடி, மின்னல் தாக்கங்களும், காற்றின் வேகம் சற்று அதிகரித்துக் காணப்படும் எனவும் தெரிவித்தார்.
Administrator ஆல் எழுதப்பட்டது சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2012 13:00
Administrator ஆல் எழுதப்பட்டது செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2012 10:33
Administrator ஆல் எழுதப்பட்டது சனிக்கிழமை, 10 டிசம்பர் 2011 21:50
இவ்வாண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் இன்று மாலை 6.16 முதல் இரவு 9.48 மணிவரையான காலப்பகுதியில் நிகழவுள்ளது.
இருப்பினும் இந்த சந்திர கிரகணம் இன்று இரவு 11 மணிக்கே முழுமையாக நிறைவடையும்.
இன்றைய சந்திர கிரகணத்தை இலங்கையில் முழுமையாக காணக்கூடியதாக இருக்கும் என ஆதர் சி.கிளார்க் மத்திய நிலையம் குறிப்பிட்டது.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி குறுக்கிடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகின்றது. இதன்போது சூரியனின் நிழல் பூமியை ஊடறுத்து சந்திரனில் படியும் போது சந்திரனின் நிறத்தில் மாற்றம் ஏற்படும் என வானியல் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.
இதன்படி பூமியின் நிழல் சந்திரனை முழுமையாக மறைத்து 51 நிமிடங்கள் நீடிக்கவுள்ளது. இவ்வாறு இலங்கை நேரப்படி இன்று இரவு 7.36 மணி முதல் 8.27 மணிவரை முழு சந்திர கிரகணம் தென்படவுள்ளது. மொத்தமாக இந்த சந்திர கிரகணம் 3 மணி 52 நிமிடம் 17 வினாடிகள் நீடிக்கவுள்ளதாக ஆத்தர் சி. கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்தது.
இன்று நிகழவுள்ளது இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரணமாகும். இதற்கு முன்னர் கடந்த ஜூன் 10ஆம் திகதி சந்திரகிரகணம் ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஒரு சந்திர கிரகணம் இரண்டு ஆண்டுகள் கழித்தே நிகழவுள்ளது.
இதன்படி எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதியிலேயே மீண்டுமொரு சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. எனினும் அந்த சந்திரகிரகணத்தை இலங்கையில் முழுமையாக காண முடியாது என வானியல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் இன்றைய தினத்தை தவிர்த்து இலங்கை மீண்டும் முழுமையான சந்திரகிரகணத்தை காண்பதற்கு 6 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதாவது வரும் 2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 21ஆம் திகதி நிகழவுள்ள சந்திர கிரகணத்தையே இலங்கையால் முழுமையாகக் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Administrator ஆல் எழுதப்பட்டது வெள்ளிக்கிழமை, 09 டிசம்பர் 2011 22:08
பொத்துவில் தினகரன் விசேட நிருபர்
பொத்துவில் பிரதேச நன்னீர் மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் வீச்சு வலை நன்கொடை வழங்கும் வைபவம் பொத்துவில் நூலக கேட்போர் கூடத்தில் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.ஏ. வாசித் தலைமையில் நடைபெற்றது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம். அப்துல் மஜீட்டின் 2011 நிதி ஒதுக்கீட்டில் ரூபா 250000 பெறுமதியான தரம் மிக்க வீச்சு வலைகள் எழுபது மீனவர்களுக்கு வழங்கப்பட்டது.
Administrator ஆல் எழுதப்பட்டது ஞாயிற்றுக்கிழமை, 06 நவம்பர் 2011 16:06

தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடைபெறும் ‘வியர்வையின் ஓவியம்’ உழைக்கும் மக்கள் கலைவிழாவில் இவ்வருடத்தின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை கவிஞர் பொத்துவில் அஸ்மின் பெற்றுக்கொண்டார்.
இவ்விழா, கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.
இயக்குனர் கேசவராஜ் இயக்கும் ‘பனைமரக்காடு’ திரைப்படத்தின் மூலம் திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ள இவர், ஏற்கெனவே ஜனாதிபதி விருது-(2001)இஅகஸ்தியர் விருது(2011) சிறந்த பாடலாசிரியருக்கான விருது (2010) உட்பட 10க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.
தனது எனும் ‘ரத்தம் இல்லாத யுத்தம்’ கவிதை நூல் மிக விரைவில் வெளியிடவுள்ளதாகவும் இவர் கூறுகிறார்.
Administrator ஆல் எழுதப்பட்டது திங்கட்கிழமை, 12 செப்டம்பர் 2011 12:59

A married couple drowned in Paanama area in Pottuvil September 9 morning while fishing in the Panagala lagoon, Police Spokesman SP Prishantha Jayakoddy stated.
The bodies of the two victims have been found and are awaiting the post mortem examinations.
மேலதிகக் ஆக்கங்கள்...
பக்கம் 1 - மொத்தம் 23 இல்
விளம்பரம்
GCE A/L EXAMINATION 2011
Enter your Index Number
இங்குள்ள விளம்பரங்களை கிளிக் செய்து உதவி செய்யுங்கள்
தேடல்
Login Form
கருத்துக்கணிப்பு
இத்தளம்பற்றி உங்கள் அபிப்பிராயம்






![]() | Today | 444 |
![]() | Yesterday | 792 |
![]() | This week | 444 |
![]() | Last week | 4641 |
![]() | This month | 11388 |
![]() | Last month | 7651 |
![]() | All days | 213323 |
Your IP: 38.107.179.237
,
Today: மே 20, 2012










